Posts

Showing posts from November, 2017

வெண்ணிலா

Image
   வான் மங்கை அட்டிகையின்   வனப்பு மிகு வைரமே   வெண்ணிலாவே ! நீ வெண்பஞ்சு மேகத்தில் வெடிக்காத பருத்தியாய் கருங்கிணற்று வானத்தின்   கீழ் கிடக்கும் துளி நீராய் விழி விசும்பின் வனப்புமிகு பாவையாய் சின்மலர் விண்மினிடையே சிங்கார பெருமலராய் போட்டியின்றி தேர்வான உலக அழகியாய் உலா வரும் கோலமிகு அழகினை அமிழ்தமாக பருகாத ஆருயுரும் உளதோ? இரவியின் செம்முகம் மறைந்தபின் ; இரவின் தொடக்கமாய் வெண்முகம் காட்டும் வெண்ணிலாவே! திங்களென்று பெயர் பெற்றும் ஒரு திங்கள் முழுதாய் நிலைக்காததேன் ! நிலையற்ற மனித வாழ்வை உணர்த்திடவா ! --- தாமரை குணாளன் --

யாருக்கு யாரோ ?

Image
                                                                                                                                  செய்யூர் என்னும் கிராமத்தில் வரதன், கோலப்பன் ,விக்கிரமன் என்னும் மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.                                                                                                                                                                  வரதன் பெருந்தொப்பையுடன், சற்று குள்ளமான உருவமுடையவனாய், பதத்துக்கு மீறி வறுக்கப்பட்ட கோதுமையின் நிறத்தில் இருப்பான். இடதும் வலதுமாக சற்று ஆடி ஆடி அவன் நடந்து வருகையில் ,பலர் மனதுக்குள்ளும்,சிலர் வெளிப்படையாகவும் அவன் தோற்றத்தையும்,நடையையும் பரிகாசம் பண்ணுவது வழக்கம்.அவன் சட்டி ,பானை செய்யும் குயவன்.                                                                                                                                              கோலப்பன், தோற்றத்தில் வரதனுக்கு நேர் எதிர்மறையாக இருப்பான்.நெடுநேடுவென்று   வளத்தியாக,சதையை சுத்தமாக வழித்தெடுத்தது போல ஒடுங்கிய உடல் கூறு.சாரை பாம்பு போல வி

கர்மா

Image
                                                                            வினை விதைத்தவன் வினை அறுப்பான் ,தினை விதைத்தவன் தினை அறுப்பான். விதையின்(கர்மா) அறுவடை(பலன்) நாளானது ஒவ்வொரு விதைக்கும் மாறுபடும் .சில விதை உடனே முளைக்கும், சிலது வருடக்கணக்கில் காத்திருந்து முளைக்கும்.     மரம்,செடி,கொடி,வேளாண்மை போலில்லாமல்  கர்மாவில் துரதிஷ்டவசமாக, விதைக்கப்படும் எல்லா விதைகளும் முளைத்தே தீரும். அறுவடை செய்யவே பணிக்கப்படும்.அறுவடைக்கான கருவி அவரவராகவே இருக்கலாம் அல்லது வேறு ஒருவராக இருக்கலாம் .கர்மா என்பது விதைப்பது மட்டுமல்ல ,விதைத்ததன் பயனை அனுபவிப்பதும் தான்.      ஜனனம் , [ வாழ்க்கை ] பயணம் , மரணம் , மறுஜென்மம் ( மறுஜென்மம் உண்டா என்பதற்கு  சான்று கொடுத்து நிரூபிக்கவோ அல்லது ஆதாரமற்றதை பொய் , புரளி என ஒதுக்குவதற்கோ இது அறிவியல் இல்லை ) என வாழ்வை  அனைத்து நிலைகளிலும் நிர்ணயிக்கும் விசையானது இந்த கர்மா.ஒருவருக்கு கர்ம வினையின் ஆழத்தை விளக்கி புரிய வைப்பது கடினம்.வாழ்வின் நிகழ்வுகளை ஆராய்ந்து ,அறிந்து ,தெரிந்து ,தெளிந்தால்

லக்ஷ்மிக்கு’ தாமரையின் தராசு.

  https://youtu.be/vP 5 dOY 42 DKI   இந்த லக்ஷ்மி குறும்படத்தின் கருத்துகணிப்பு வயது ரீதியாகவும் ,வளர்ந்த சூழல் சார்ந்தும் மாறுபடும்.சேகர்களை விட கதிர்களே இச்சமுதாயத்தில் அதிகம்.                                            இயந்திரத்தனமான வாழ்வு மன சிதைவையும் சுணக்கத்தையும்  கொடுத்தே தீரும் .மறுக்க முடியாத உண்மை.அதை கையாள்வதில் இரண்டு வகை அணுகுமுறை இருக்கும்.அறிவுபூர்வமானதாக கருதப்படும் [IQ based –intelligent quotient] மற்றும் உணர்வுபூர்வமான அணுகுதல்[ EQ based-emotional quotient]. எல்லா நிகழ்வுகளுக்கும் முதல் வகை அணுகுமுறை உதவாது.மேலும் அபத்தமாகவும் இருக்கும்.எடுத்துக்காட்டாக தன் கணவனை இழந்த பெண்ணிடம்,” ஆன்மாவுக்கு அழிவில்லை, பிறப்போர் எல்லாம் இறந்தே ஆக வேண்டும்.இதுவே நியதி “ என்று வேதாந்தம் ,சித்தாந்தம் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும்.அதே நேரத்தில் ,”உன்னுடைய இழப்பு ஈடு காட்ட முடியாதது தான் ,உன் குழந்தைகளின் எதிர் காலத்தை வளமாக்கி தருவதற்கு நீ இரட்டிப்பு சக்தியுடன் செயல் படவேண்டியுள்ளது” எனும் இரண்டாவது வகை ஆறுதல் பலம்மிக்கது ,பலனளிப்பது.தற்கொலை எண்ணம் வரும் நேர

பேதை

Image
பேதை           ‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.5 முதல் 8 வயது வரையிலான பெண் பருவத்தை  பேதை என சங்க இலக்கிய குறிப்பு தெரிவிக்கிறது.                  அவளுக்கு அப்போது 6 வயது. பள்ளியில் சேர்க்கவில்லை.4 வயதில் L.K.G சேர்க்கப்படும் 80 களில் இளையோர் கல்வி கற்க தொடங்கி சீருடை அணிந்து பள்ளி செல்லும் காலத்திலும் கல்வியின்றி பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்துகொண்டிருந்தாள்.தாய்மைக்கே உரிய தவிப்புடன் அவள் தாய் தவியாய் தவித்திருந்தார் பள்ளியில் சேர்க்க.அந்த சிறிய ஊரில் கான்வென்ட்டுக்கு  இணையான ஒரு சிறந்த பள்ளி உண்டு.அப்பள்ளியில் பிள்ளைகளை கொண்டு விட பட்டம் பெற்ற  பெற்றோரே  அஞ்சுவர்.ஏனெனில் அப்பள்ளி நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளர் சின்ன மிஸ் என்று அழைக்கப்படுபவர் ஆங்கிலோ இந்திய பெண்மணி.ஆங்கிலம் மட்டுமே பேசுவார்.இப்படியே பயந்தால் பிள்ளை தற்குறியாகிவிடுமே என கலங்கினார் தாயார் ,ஆங்கில எழுத்துக்களையும் ,'ஏ' -ஆப்பிள் என்ற எழுத்து அடையாள பாடத்தையும் சொல்லிகொடுத்து கூட்டிச் சென்றார் அந்த E.S.L.C தாய்.அட்மிஷன் அன்றே உறுதியானது .1980 லேயே ரூ.60 / மாதம் கட்டணம் வாங்கும் பள்ளி.சீருடை, புத்தகம்